கேக் வாங்குனா பணம் கேப்பியா? பேக்கிரியை சூறையாடிய போதை ஆசாமிகள்..! - Seithipunal
Seithipunal


வாங்கிய  கேக்கிற்கு பணம் கேட்டதால் போதை ஆசாமிகள் பேக்கிரியை அடித்து உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம் திருப்பூண்டி கடைத்தெருவில் முகமது அலி என்பவர் பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார். இதிலேயே இந்த வழக்கம் போல அவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த போதை ஆசாமிகள் நால்வர் அரை கிலோ கேக் கேட்டுள்ளனர்.

கேக்கை கொடுத்த முகமது அலி அதற்கான பணத்தை கேட்டுள்ளார் இதனால் கோபமடைந்த அந்த ஆசாமிகள் அவரை தகாத வார்த்தைகள் பேசி பேக்கிரியை  அடித்து உடைத்துள்ளனர். இந்த சத்தம் கேட்டு பக்கத்து கடைக்காரர்கள் வருவதற்குள் அவர்கள் தப்பியோடினர்.

அதில், ஒருவரைப் பிடித்த பொதுமக்கள் காவல்துறை ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Drug addicts who beat up a baker


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->