ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் 03-ஆம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி; டிசம்பர் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்..!
Driverless Metro Train Phase 3 Trial Run Successful
பூவிருந்தவல்லி, போரூர் இடையே ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் 03-ஆம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 2.5 கிமீ தொலைவுக்கு முதல் கட்டமாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் மார்ச் 21-ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து, 02-ஆம் கட்ட சோதனை ஓட்டம் ஏப்.28-ஆம் தேதி நடைபெற்றது.
இந் நிலையில் 03-ஆம் கட்ட சோதனை ஓட்டம் இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்ட்டுள்ளது. குறித்த ஓட்டம் போரூரில் இருந்து பூவிருந்தவல்லி வரை நடத்தி முடிக்கப்பட்டது.
ஏற்கனவே நடந்த, 02 கட்ட சோதனை ஓட்டங்கள், அப்லைனில் நடைபெற்றது. இந்நிலையில், 03-ஆம் கட்ட சோதனை ஓட்டம் டவுன்லைனில் நடைபெற்றுள்ளது. ஒரு மாதத்திற்குள் முழு வேகத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்படள்ளதாகவும், டிசம்பர் இறுதிக்குள் இந்த மெட்ரோ ரயில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் மெட்ரோ ரயில் இயக்குநர் சித்திக் கூறியுள்ளார்.
English Summary
Driverless Metro Train Phase 3 Trial Run Successful