45 கிலோ தூய தங்கத்தில் ஜொலிக்கும் அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம்: நிருபேந்திரா மிஸ்ரா தகவல்..!
45 kg of gold has been mixed in the construction of the Ayodhya Ram Temple
அயோத்தி ராமர் கோயிலின் முதல் தளத்தில் கட்டப்பட்டுள்ள ராமர் தர்பார் உட்பட 08 கோயில்களுக்கு நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் ராமர் கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்தில் மொத்தம் 45 கிலோ தூய்மையான தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தங்கத்தின் மதிப்பு வரிகளை தவிர்த்து சுமார் ரூ.50கோடி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, கோயிலின் தரை தளத்தில் உள்ள கதவுகள் மற்றும் ராமரின் கீரிடத்திலும் தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதுதாக தெரிவித்துள்ளார். மேலும், சேஷாவதர் கோயிலில் தங்க வேலைகள் இன்னும் நடந்து வருகின்றதாகவும், ராமர் கோயிலின் முக்கிய கட்டமைப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அருங்காட்சியகம், ஆடிடோரியம் மற்றும் விருந்தினர் மாளிகை உள்ளிட்ட கோயில் வளாகத்தின் பிற பகுதிகள் இன்னும் கட்டுமானத்தில் உள்ளன என்று நிருபேந்திர மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் இந்த பணிகள் யாவரும் நிறைவடையும் எனவும், ராமர் தர்பார் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே ராமர் தர்பாரை பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், குஜராத்தை சேர்ந்த புகழ்பெற்ற நகை நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் ஜென்மபூரி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளைக்கு வைரங்கள் பதிக்கப்பட்ட 11 கிரீடங்கள், ஒரு தங்க வில் மற்றும் அம்பு 30-கிலோ வெள்ளி, 300-கிராம் தங்கம் மற்றும் மாணிக்கங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார் என்று விஷ்வ இந்து பரிஷத்தின் தேசிய பொருளாளர் தினேஷ் நெவாடியா குறிப்பிட்டுள்ளார்.
English Summary
45 kg of gold has been mixed in the construction of the Ayodhya Ram Temple