தலைக்கு பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவர் படுகொலை!
Naxal leader murdered after bounty announced on his head
நக்சலைட்டுகளின் முக்கிய தலைவர் மண்டுகுல பாஸ்கர் ராவ் பாதுகாப்பு படையினருடனான மோதலில் சுட்டு கொல்லப்பட்டார். இவரை பிடித்து தருபவர்களுக்கு ரூ.45 லட்சம் பரிசு தொகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் நேஷனல் பார்க் பகுதியில், பாதுகாப்பு படையினருடனான மோதலில் நக்சலைட்டுகளின் முக்கிய தலைவர்சுட்டு கொல்லப்பட்டார். இதே பகுதியில் மற்றொரு மூத்த நக்சலைட்டு தலைவரான சுதாகர் என்ற கவுதம் என்பவரை வன பகுதியில் வைத்து கடந்த வியாழக்கிழமை படையினர் சுட்டு கொன்றனர் என்பது கூடுதல் தகவல் .
இதுபற்றி போலீசார் கூறும்போது, அந்த நபர் பாஸ்கர் ராவ் என்ற மயிலரப்பு அடெல்லு என்ற மண்டுகுல பாஸ்கர் ராவ் என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.அவருடைய உடலை கைப்பற்றிய படையினர், ஏ.கே.-47 ரக துப்பாக்கி, வெடிபொருட்கள் மற்றும் பிற ஆயுதங்களையும் கைப்பற்றினர்.
அவரை பிடித்து தருபவர்களுக்கு ரூ.45 லட்சம் பரிசு தொகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் வேறு நக்சலைட்டுகள் யாரும் பதுங்கி உள்ளனரா? என தேடுதல் பணியும் தொடர்ந்து வருகிறது. நேஷனல் பார்க் பகுதியில்அவருடன் 26 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்நிலையில், 3 வாரங்களில் நக்சலைட்டுகளின் முக்கிய தலைவர்களின் வரிசையில், 3-வது முக்கிய நபர் என்கவுன்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
English Summary
Naxal leader murdered after bounty announced on his head