லாரி மீது மோதிய அரசு பேருந்து.. ஓட்டுநர், நடத்துனர் பரிதாப பலி..! - Seithipunal
Seithipunal


பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் நடத்துனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகே உள்ள சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் இரும்பு பைப்புகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.  அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அரசு பேருந்து ஒன்று 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்து கொண்டிருந்த  பேருந்து அந்த லாரியை கடந்து செல்ல முயன்றது.

அப்போது, மற்றோரு வழித்தடத்தில் இருந்து வாகனம் வந்ததால்  ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து லாரியின் பின்பக்கத்தில் சிக்கியது. இதில், ஒட்டுநர் மற்றும் நடத்துனர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விபத்தின் காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Driver and conductor death in accident


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->