பாமக செயற்குழு உறுப்பினர் மறைவு.! வேதனையில் மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


கோவடி சாரங்கபாணி மறைவுக்கு, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரின் அந்த இரங்கல் செய்தியில், "திண்டிவனத்தை அடுத்த கோவடி கிராமத்தைச் சேர்ந்த, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சாரங்கபாணி நேற்று காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன்.

வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து சாரங்கபாணி அதில் தம்மை இணைத்துக் கொண்டு சமூகநீதிக்கான போராட்டங்களில் கலந்து கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட பிறகு அதிலும் இணைந்து கட்சி வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர். எந்த  பதவிக்கும் ஆசைப்படாதவர்; எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சிக்கு விசுவாசமாக இருந்தவர்.

திண்டிவனத்தில் கடந்த மாதம் 20-ஆம் தேதி நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கூட அவரது உழைப்பையும், விசுவாசத்தையும் நினைவு கூர்ந்து பேசினேன். அதன்பின் இரு வாரங்கள் கூட ஆகாத நிலையில் அவர் நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார் என்பதை  என்னால் நம்ப முடியவில்லை. அவர் எனது அன்புக்குரியவர்; அவரை என்னால் மறக்க முடியாது.

கோவடி சாரங்கபாணி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும்" மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். தெரிவித்துக் கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dr Ramadoss Mourning To Sarangabani dead


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->