வரதட்சணை கொடுமைப்படுத்தி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.! கணவர் உட்பட 6 பேரிடம் விசாரணை.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் வரதட்சணை கொடுக்காததால் பெண்ணை கொடுமைப்படுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் குமணன்தொழு வேம்பூர் பகுதியை சேர்ந்தவர் மணீஸ்வரன் இவரது மனைவி மேகலா (34). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் மணீஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு மேகலாவை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும் மணீஸ்வரனின் சகோதரர், மேகலாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மேகலா ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மேகலாவின் கணவர், சகோதரர் கோவிந்தசாமி மற்றும் அவரது தாய் தந்தை உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dowry torture and sexual harassment of women in theni


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->