திருவண்ணாமலை || நள்ளிரவில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.!
dmk executive murder in thiruvannamalai
திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னாள் திமுக நகர இளைஞரணி துணை அமைப்பாளரான முத்து என்பவர் கட்டட ஒப்பந்ததாரராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், இவர் நேற்று இரவு ராஜேஷ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, இவர்களை ஒரு கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களில் மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்துள்ளனர். இதையடுத்து முத்து போளூர் சாலையில் உள்ள ஆவின் குளிரூட்டும் நிலையம் அருகே சென்ற போது பின்னால் வந்தவர்கள் இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்துள்ளனர்.
இதனால், முத்து, ராஜேஷ் உள்ளிட்ட இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். உடனே அந்த கும்பல் அவர்களை வெட்ட முயன்றதில் ராஜேஷ் தப்பித்து ஆவின் குளிரூட்டும் மையத்திற்குள் சென்றுள்ளார். உடனே அந்த மர்ம நபர்கள் முத்துவை பின்தொடர்ந்து சென்று ஓட ஓட விரட்டி சென்று சரமாரியாக வெட்டிவிட்டு தப்பித்துச் சென்றனர்.

இதனால், முத்து வலித் தாங்க முடியாமல் கத்தி சத்தம் போட்டுள்ளார். இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து முத்துவை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஒரு சொகுசு கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனத்தில் ஆறு பேர் வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார், முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
dmk executive murder in thiruvannamalai