பிரச்சார மேடையில் கண்ணீர் விட்டு கதறிய பிரேமலதா - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


அதிமுகவின் கூட்டணிக்கு கட்சியான தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகத் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் குமரகுருவுக்கு வாக்கு சேகரிபில் ஈடுபட்டார். பின்னர் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில்  கலந்து கொண்டார். 

அப்போது, அதிமுக வேட்பாளர் குமரகுரு, தேமுதிக பற்றியும் விஜயகாந்த் பற்றியும் பேசினார். அவர் பேசியதை மேடையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் விட்டு அழுதார்.

இதைத் தொடர்ந்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மேடையில் வேட்பாளர் குமரகுருவை ஆதரித்தும், கேப்டன் குறித்தும், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி குறித்தும் பேசும்ம் கண்ணீர் விட்டு அழுதார். 

இந்த கூட்டத்தில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட தேமுதிக அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கடந்த 2011 சட்டமன்ற தொகுதியில் ரிஷிவந்தியம் தொகுதியில் கேப்டன் விஜயகாந்த் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dmdk public secretary premalatha vijayakant cry in kallakurichi rlrction campaighn


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->