2025-2026 கல்வியாண்டிற்கான தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர்கள் சேர்க்கை..!
Direct student admissions to vocational training institutes for the academic year 2025 and 2026
தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறைக்கான 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் நேரடிச் சேர்க்கை 23.06.2025 முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 125 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 301 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்கள் தாம் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று தாம் விரும்பும் தொழிற்பிரிவை தெரிவு செய்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை, அத்தோடு, கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750/- வழங்கப்படுகிறது. மேலும், தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா மூடு காலணிகள் (Shoes), விலையில்லா பயிற்சிக்கான கருவிகள், கட்டணமில்லா பேருந்து வசதி இவை அனைத்தும் வழங்கப்படவுள்ளது.

குறிப்பாக கடந்த ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில் 85% பேர் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். அதன்படி, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இன்றைய தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழில் 4.0 உள்ளிட்ட பல நவீன தொழிற்பிரிவுகளில் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் மாணவர்கள் நேர்வில் சென்று அல்லது அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, அலைபேசி எண் மற்றும் 9499055642, whatsapp எண்: 9499055618 நெனெகல் தொடர்பு கொள்ளலாம்.
English Summary
Direct student admissions to vocational training institutes for the academic year 2025 and 2026