4000 கன அடியாக குறைந்த தர்மபுரி ஒகேனக்கல் நீர்வரத்து...!
Dharmapuri Hogenakkal water flow reduced to 4000 cubic feet
தர்மபுரி மாவட்ட சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு, தமிழகம் மற்றும் கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

இதனால் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கேரட்டி, நாட்றாம்பாளையம், அஞ்செட்டி, ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5000 கனஅடியாக வந்தது. இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்துள்ளதால், இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 4000 கன அடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
மேலும், சினிபால்ஸ்,மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.அதன் பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள், காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
English Summary
Dharmapuri Hogenakkal water flow reduced to 4000 cubic feet