அடடே! 18,000 கன அடியாக குறைந்த தர்மபுரி ஒகேனக்கல் நீர்வரத்து...! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மற்றும் கேரளா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வரு ம் காரணமாக கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.மேலும், அங்கு பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளின் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால்  தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.இந்நிலையில் கர்நாடகா அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அளவு உயர்வதும் குறைவதுமாக இருந்து வருகிறது.இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 20900 கனஅடி தண்ணீர் வந்தது.மேலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் கர்நாடகா அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது.

இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 18000 கனஅடியாக குறைந்து வந்தது.இதன் காரணமாக மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்த ருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நடைபாதைக்கு செல்லும் நுழைவு வாயிலை போலீசார் பூட்டி சீல் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்க மட்டும் நேற்று அனுமதி அளித்துள்ளது.இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.20-வது நாளாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள்,காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dharmapuri Hogenakkal water flow reduced to 18000 cubic feet


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->