#தர்மபுரி || 16 வயது பள்ளி மாணவியின் வாயில் துணியை அடைத்து பலாத்காரம்.! கணவன்-மனைவி கைது.! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் அவசர ஊர்தி ஓட்டுனர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவரது மூத்த மகள் (வயது 16) தர்மபுரி அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இவர் குள்ளனூரில் உள்ள தனது அத்தை கவிதா வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்று வருகிறார்.

கடந்த 11-ஆம் தேதி கவிதா வலுக்கட்டாயமாக மாணவியை இழுத்துச்சென்று படுக்கை அறைக்கு தூக்கி சென்றுள்ளார்.  அவரது கணவர் ஓம்சக்தி மாணவியின் வாயில் துணியை வைத்து அடைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிய வந்துள்ளது. 

அவர்கள் மாணவியிடம் உன் பெற்றோரிடம் இதனைப்பற்றி கூறினாள் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

மாணவி தனது தந்தையிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர் தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஓம் சக்தி மற்றும் கவிதா ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri 16 years old School girl Abuse


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->