அவனியாபுரம் ஜல்லிகட்டை வேடிக்கை பார்க்க சென்ற சிறுவனுக்கு நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


ஜல்லிகட்டு போட்டியை பார்த்து கொண்டிருந்த மாணவன் மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் பண்டிகையோட்டி நேற்று உலக புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிகப்பட்டனர்.

இருப்பினும் ஜல்லிகட்டு மாடுகள் பகுதியில் சிறுவர்கள் கூட்டமாக நின்று போட்டியை ஆர்வமாக பார்த்து வந்தனர். இந்நிலையில், அவனியாபுரத்தை சேர்ந்த பாலமுருகன் (18) என்ற மாணவன் ஜல்லிகட்டு போட்டியை பார்த்து கொண்டிருந்தான்.

அப்போது எதிர்பாராத விதமாக ஜல்லிகட்டு காளை ஒன்று அந்த மாணவனின் நெஞ்சு பகுதியில் முட்டியது.  உடனடியாக  அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

death of the boy who knocked the bull


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->