திருநெல்வேலி.! மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் சேந்திமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த உச்சிமுத்து என்பவரின் மகன் கணேசன்(25).

இவர் உடையார்பட்டியில் உள்ள ஒரு கடையில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு வேலை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த கணேசன் மொட்டை மாடியில் படுத்து உறங்கி உள்ளார்.

இதையடுத்து இன்று அதிகாலை எழுந்த கணேசன் தூக்கக்கலக்கத்தில் நிலைதடுமாறி மொட்டை மாடியில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளார்.

கணேசனின் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது கணேசன் விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே கணேசன் உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Death of a youth who fell from the terrace in Tirunelveli


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->