குளத்தில் மிதந்த ஆண் சடலம்... தீவிர விசாரணையில் போலீசார்.! மயிலாடுதுறையில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறையில் குளத்தில் மிதந்த ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மேட்டுத்தெரு குளத்தில் 30 வயது மதிக்கத்தக்க அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்துள்ளது. இதைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குளத்தில் கிடந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குளத்தில் உயிரிழந்த கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் குளத்தில் இறந்த கிடந்த வாலிபர் பச்சை நிற கோடு போட்ட சட்டையை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dead body of a man found floating in the pond in mayiladuthurai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->