ஒரே வீட்டில் நேர்ந்த கொடூரம் - மனைவி, குழந்தை இறந்த சோகத்தில் வாலிபர் தற்கொலை.!
couples sucide after baby died in krishnagiri
ஒரே வீட்டில் நேர்ந்த கொடூரம் - மனைவி, குழந்தை இறந்த சோகத்தில் வாலிபர் தற்கொலை.!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குண்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜலபதி. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரியில் உள்ள தனியார் கல்குவாரியில் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்த போது ஜலபதிக்கும், குமரி மாவட்டம் கீழ் காட்டுவிளை கிராமத்தை சேர்ந்த சாம் ராபின்சன் என்பவரின் மகள் அபிசால்மியா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதுகுறித்த விவகாரம் பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிய வந்ததை அடுத்து அவர்கள் இதனை ஏற்க மறுத்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அபிசால்மியா கடந்த 2021-ம் ஆண்டு ஜலபதியுடன் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

அதன் படி அவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தைக்கு இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தது. குழந்தை இறந்ததால் வேதனை அடைந்த அபிசால்மியா கடந்த 6ம்தேதி இரவு கணவர் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் குழந்தை இறந்த சோகத்தில் மனைவியும் உயிரிழந்ததால் பெரும் மன வேதனை ஏற்பட்டு நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
couples sucide after baby died in krishnagiri