கிருஷ்ணகிரியில் சோகம் - காதலியுடன் சென்ற மகன் - மன வேதனையில் தம்பதியினர் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரியில் சோகம் - காதலியுடன் சென்ற மகன் - மன வேதனையில் தம்பதியினர் எடுத்த விபரீத முடிவு.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெருகோனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் சரவணன் - கீதா தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மூத்த மகன் ரஞ்சித்குமாரும், அதே பகுதியை சேர்ந்த தீபிகா என்பவரும் காதலித்து வந்தனர். 

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் காதலுக்கு இருதரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதனை பொருட்படுத்தாமல் இருவரும் பழகி வந்ததைத் தொடர்ந்து, திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தனர்.

அதன் படி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி அப்பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையறிந்த ரஞ்சித்குமாரின் பெற்றோர் மனவேதனையில் நேற்று காலை வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இரண்டு பேரையும் மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 2 பேரும் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

couples died in krishnagiri for son get love marriage


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->