தஞ்சாவூரில் சோகம்.. வயலுக்குச் சென்ற தம்பதி சடலமாக மீட்பு - நடந்தது என்ன?
couples died for electric shock attack in thanjavur
தஞ்சாவூர் அருகே வயலுக்குச் சென்ற போது மின்சாரம் தாக்கி தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப்பெரம்பூர் இரண்டாம் சேத்தி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் - ராமாயி தம்பதியினர். இவர்களுக்கு கள்ளப்பெரம்பூர் ஓடவாய்க்கால் அருகே சொந்தமான வயல் ஒன்று உள்ளது. இந்த நிலையில் தம்பதியினர் இருவரும் நேற்று மதியம் வயலுக்கு சென்றனர்.

அங்கு சுப்பிரமணியன் வயலுக்கு அருகில் உள்ள பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலி மீது மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதனை கவனிக்காமல் இருவரும் இரும்புவேலியை தொட்டுள்ளனர். இதில் அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் வயலுக்குள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து அளித்த தகவலின் படி போலீசார் விரைந்து வந்து இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
couples died for electric shock attack in thanjavur