சமையல் எண்ணெய் விலை திடீர் உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் சந்தையில், சமையலுக்கு பயன்படுத்தும் கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் விலை திடீரென உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதில், கடந்த வாரம் 15 கிலோ கடலை எண்ணெய் 2900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது 50 ரூபாய் உயர்த்தப்பட்டு, 2950 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அதேபோல், கடந்த வாரம் 15 கிலோ நல்லெண்ணெய் 5280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது 165 ரூபாய் உயர்த்தப்பட்டு, 5445 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது இந்த செய்தி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cooking oil price increase in virudhunagar market


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->