கருணை அடிப்படையில் பணி நியமனம், அரசு ஊழியரின் பரம்பரை வழி உரிமை கிடையாது - உயர்நீதிமன்றம் அதிரடி! - Seithipunal
Seithipunal


"கருணை அடிப்படையில் பணி நியமனம் என்பது, பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியரின் பரம்பரை வழி உரிமை கிடையாது" என்று, சென்னை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சியைச் சேர்ந்தவர் யோகமலர். சார்-பதிவாளராகப் பணிபுரிந்து இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு உயிரிழந்ததார். இதனையடுத்து யோகமலர் மகன் வினோத்கண்ணா, கருணை அடிப்படையில் தனக்கு அரசு வேலைவாய்ப்பு கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விவசாரணை செய்த உயர்நீதிமன்ற கிளை, மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது. 

இந்நிலையில், உயர்நீதிமன்ற கிளையின் இந்த உத்தரவை எதிர்த்து, வினோத்கண்ணாவின் சகோதரி மகாலட்சுமி மேல்முறையீடு மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் முன்பு, ஆஜராகிய மகாலட்சுமி தரப்பு வழக்கறிஞர், வினோத்கண்ணாவுக்கு சொந்த வீடு, நிலங்கள் உள்ளதாகவும், அவர் தாயாரைச் சார்ந்திருக்கவில்லை என்றும் வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள்,  "கருணை அடிப்படையில் பணி நியமனம் என்பது, பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியரின் பரம்பரை வழி உரிமை கிடையாது" என்றனர்.

தொடர்ந்து, மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர். மேலும், கருணை அடிப்படையிலான பணிநியமனம் பெற அரசின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே உரிமை கோர முடியும் என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

compassionate base govt job case


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->