தங்கைக்கு காதல் தொல்லை கொடுத்த மாணவன்.. தட்டிக்கேட்ட அண்ணனுக்கு நேர்ந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் திருப்பதி என்பவர் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் அவரது தங்கை உறவுமுறை கொண்ட பெண் ஒருவர் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படிக்கும் லிங்கேஸ்வரன் என்பவர் மாணவியை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததால் இரு தரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருப்பதி நேற்று லிங்கேஸ்வரனிடம் இந்த பிரச்சனை குறித்து கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் லிங்கேஸ்வரன் பிளேடால் திருப்பதியில் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். 

இதில் படுகாயம் அடைந்த திருப்பதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லிங்கேஸ்வரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

College students attack sister brother in Krishnagiri


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->