செல்போன் பார்த்ததை கண்டித்த பெற்றோர் - கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு.!!
college student sucide in kallakurichi
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலையில் மேல்வாழப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சடையன் மகள் கிருஷ்ணவேணி. இவர் சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் கிருஷ்ணவேணி கல்லூரி விடுமுறையையொட்டி, கடந்த 20 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.
அதன் பின்னர் அவர், செல்போனை மட்டுமே பார்த்து கொண்டிருந்ததால் கிருஷ்ணவேணியின் தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த கிருஷ்ணவேணி, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டு, மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் கிருஷ்ணவேணியை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலை மேலும் மோசமானதால் வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், வரும் வழியிலேயே கிருஷ்ணவேணி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
college student sucide in kallakurichi