எமனாக மாறிய சொகுசு கார்... கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்.! திருப்பூரில் பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் சொகுசு கார் மோதி கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் கணபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இவரது கல்லூரி மாணவி விஜயஸ்ரீ(19). இவர் கல்லூரி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது தாராபுரம் ஐ.டி.ஐ. கல்லூரி அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த சொகுசு கார் விஜயஸ்ரீ மீது மோதியது. 

இதில் பலத்த காயமடைந்த விஜயஸ்ரீயை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட விஜயஸ்ரீ மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சொகுசு கார் ஓட்டுநரை கைது செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

College girl killed in car collision in Tiruppur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->