#நீலகிரி || கல்லூரி மாணவி திடீர் தற்கொலை.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தில் கர்ப்பமாக்கிவிட்டு காதலன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த தொட்டன்னி பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பாலிடெக்னிக் படித்து வந்தார். இந்நிலையில் விடுமுறைக்காக ஊருக்கு வந்த மாணவி விடுதலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இதையடுத்து மாணவியின் குடும்பத்தினரும், உறவினர்களும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் மாணவியின் உடலை சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

இந்நிலையில் இறந்த இளம்பெண்ணின் சகோதரி பீரோவில் இருந்த செல்போனை எடுத்து பார்த்தபோது, இளம்பெண் பக்கத்து வீட்டைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் நந்தகுமார்(32) என்பவருடன் அதிகமாக பேசி வந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர் கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இளம்பெண்ணும், நந்தகுமாரும் காதலித்து வந்தது தெரிய வந்தது. மேலும் இவர்கள் இரண்டு பேரும் நெருங்கி பழகியதால் இளம்பெண் கர்ப்பமானார். இதையடுத்து இளம்பெண் நந்தகுமாரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் நந்தகுமார் நீ வேறு ஜாதி, நான் வேறு ஜாதி, உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். மேலும் இளம்பெண் வற்புறுத்திய நிலையில், நந்தகுமார் அவருடன் இருந்த நெருக்கமான புகைப்படம் அனுப்பி மிரட்டியுள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்த இளம்பெண் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் புதைக்கப்பட்ட மாணவியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதில் மாணவி கர்ப்பமாக இருந்தது உறுதியானது. இதையடுத்து போலீசார் மாணவியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்த நந்தகுமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

College girl commits suicide after her boyfriend refused to marry her after getting her pregnant in nilgiri


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->