சுஜித்திற்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர்.! நிதியுதவியும் அறிவித்தார்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிர் இழந்த சுஜித்தின் இல்லத்திற்கு நேரில் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுஜித்திற்கு அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து சுஜித்தின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பிறகு செய்தியாளருக்கு பேட்டி  அளித்தார் அவர். இரண்டு வயது குழந்தை சுஜித்தை உயிருடன்  மீட்க அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சுஜித்தை உயிருடன் மீட்க முடியவில்லை.

இந்த சம்பவத்தை பாடமாக எடுத்துக்கொண்டு இனி இதுபோன்று நடக்காமல் பொது மக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தையின் இறப்பில் கூட திமுக அரசியல் செய்து வருகிறது. 

இதையடுத்து, சுஜித்தின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 10 லட்சம் நிதியுதவியும், அதிமுக சார்பாக 10 லட்சமும் என மொத்தமாக 20 லட்ச ரூபாய் நிதியுதவியாக அறிவித்தார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm went to sujith house


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->