"திருச்செங்கோடு தேர் விபத்து" உயிரிழந்த வாலிபர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி; முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேரோட்டத்தின் போது ஏற்பட்ட விபற்றில் சிக்கி உயிரிழந்த வாலிபரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

விபத்து குறித்த பின்னணி:

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இன்று (31.05.2026) காலை சுமார் 10.30 மணியளவில் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் தேர்த்திருவிழா நடைபெற்றது.

இந்தத் தேரோட்டத்தின் போது, எதிர்பாராதவிதமாகத் தேரின் சக்கரத்திற்கும் அருகிலிருந்த சுவற்றிற்கும் இடையே திரு. ஹர்ஷ்வர்தன் (வயது 18, த/பெ. கோவிந்தராஜா) என்ற இளைஞர் சிக்கிக்கொண்டு பலத்த காயமடைந்தார்.

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காகச் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் அங்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முதலமைச்சரின் இரங்கலும் நிதியுதவியும்:

இந்தத் துயரமான செய்தியினைக் கேட்டுத் தான் மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்ததாக முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

நிதியுதவி: உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

சிறப்புச் சிகிச்சை: மேலும், இதே விபற்றில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திரு. சஷ்டிகன் (வயது 19, த/பெ. கௌரிசங்கர்) என்பவருக்குச் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM Joseph Vijay Announces 5 Lakh Solatium for Family of Youth Killed in Tiruchengode Temple Car Accident


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->