கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த போது ஏற்பட்ட விபரீதம்.. விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் நெல்சன் (26), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவிகுமார் (40). இவர்கள் இருவரும் அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு பகுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வந்தனர்.

இந்நிலையில், மாதவரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் பாதாள சாக்கடையை அகற்றும் பணியில் இருவரும் நேற்று பிற்பகல் ஈடுபட்டனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக சாக்கடையில் இருந்து விஷவாயு கசிந்து இருவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டு கால்வாய் சாக்கடைக்குள் மயங்கி விழுந்தனர். தீயணைப்பு படை வீரர்கள், இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் நெல்சன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ரவிகுமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cleaning bath Worker killed by poison gas


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->