வேலூர் : ரத்தத்துடன் வீட்டிற்கு வந்த எல்கேஜி மாணவன் - விசாரணையில் சிக்கிய வகுப்பாசிரியர்.!  - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம் வி.கோட்டா சாலையில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில், கோட்டைச்சேரி பகுதியைச் சேர்ந்த அருள் - தீபம் தம்பதியின் மகன் விக்ரம் அருள் எல்கேஜி படித்து வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். 

அப்போது அவரது மூக்கில் இருந்து ரத்தம் வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அவரிடம் விசாரித்துள்ளனர். அதற்கு அந்த சிறுவன் வகுப்பு ஆசிரியர் அடித்ததால் மூக்கில் ரத்தம் வந்ததாக கூறியுள்ளார். இதைகேட்ட பெற்றோர்கள் பதறி அடித்துக்கொண்டு சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிறுவனின் உறவினர்கள் பலரும் கூடியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பள்ளியில் நடந்தது குறித்து சிறுவனிடம் விசாரணை நடத்தினர்.

அந்த நேரத்தில் சிறுவனின் தாய் இதற்கு முன்னதாக, பள்ளியில் தனது மகனை ஆசிரியர் தாக்கியதாகவும், அப்போது, இனிமேல் தயவு செய்து அடிக்க வேண்டாம் என்று கூறிவிட்டு வந்ததாகவும், தற்போது மீண்டும் தனது மகனை அடித்துள்ள நிலையில், அந்த ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

class teacher attack lkg student in vellore


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->