சிறுமி பாலியல் வழக்கு: செந்தமிழ்செல்வனுக்கு 20 ஆண்டு சிறை...! - மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அணைபாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ்செல்வன் (31) என்பவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர், கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி, 16 வயதான சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, செந்தமிழ்செல்வனை கைது செய்தனர்.

இந்த வழக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முனுசாமி, குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, செந்தமிழ்செல்வனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையடுத்து, தண்டனை பெற்ற செந்தமிழ்செல்வனை காவல்துறையினர் மருத்துவ பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Child harassement case Senthamilselvan sentenced to 20 years prison Womens court verdict


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->