மின்னணு ஆதாரங்களை சேமிக்க வழிமுறை வகுங்க... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அரங்கேறிய கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

ஆயுள் தண்டனையை தூக்கு தணையாக மாற்ற வேண்டுமென கோகுல்ராஜ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற பொழுது கோகுல்ராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கொலை வழக்கில் சிசிடிவி காட்சிகள் முறையாக சேகரிக்கப்படவில்லை. 

தமிழக காவல்துறையில் மின்னணு ஆதாரங்களை சேகரிப்பதில் குறைபாடு இருப்பதாகவும் தனது வாதத்தை முன் வைத்தார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர் "மின்னணு ஆதாரங்கள் சேகரிப்பதில் எந்த தவறும் நிகழவில்லை" என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குற்ற வழக்குகளின் மின்னணு ஆதாரங்களை சேகரிப்பதில் தமிழக அரசு முறையான வழிமுறைகளை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ChennaiHC orders take action save electronic evidence


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->