சென்னை அருகே இளம்பெண் காதலனால் குத்தி கொலை! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
chennai young woman murder love issue
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மேவளூர்குப்பத்தில் வேலை பார்த்து வந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சவுந்தர்யா (வயது 23), அவரின் காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய சவுந்தர்யா, தோழிகளுடன் அறை எடுத்து தங்கி வந்தார். அதே பகுதியில் வேலை பார்த்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தினேஷுடன் பழகியதிலிருந்து இருவருக்கும் காதல் உருவாகி, 8 ஆண்டுகளாக உறவு நீடித்து வந்தது.
பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் நடந்ததுடன், செப்டம்பரில் திருமணம் நடைபெறவிருந்தது.
இந்நிலையில், சவுந்தர்யா சமீபத்தில் மற்றொரு ஆண் நண்பருடன் நெருக்கமாக பழகியதாகக் கூறப்படுகிறது. தினேஷ் பலமுறை எச்சரித்தும் சவுந்தர்யா அவரது எண்ணைத் தடை செய்ததுடன், புதிய நண்பருடன் தொடர்பைத் தொடர்ந்ததாக தெரிகிறது. இதனால் தினேஷ் கடும் கோபத்தில் இருந்தார்.
சம்பவம் நடந்த நேற்று இரவு சவுந்தர்யாவுடன் வாக்குவாதம் செய்த தினேஷ், இன்று அதிகாலை மீண்டும் வந்து, அறையில் தனியாக இருந்த சவுந்தர்யாவை பல இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சவுந்தர்யாவை ரத்தக் குளத்தில் கண்டதும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து தினேஷை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீசார் தேடிவருகின்றனர். சவுந்தர்யாவுடன் நெருக்கமாக இருந்த மற்ற ஆண் நண்பரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிடப்பட்டு உள்ளனர்.
English Summary
chennai young woman murder love issue