சென்னையில் பட்டா கத்தியால் வெட்டிக்கொண்ட இருதரப்பு : மோதலில் 4 பேர் படுகாயம்., 5 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


வேளச்சேரியில் ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் கத்தியால் வெட்டிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை : வேளச்சேரியில் இறுதி சடங்கு நிகழ்ச்சியின்போது இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவரை ஒருவர் கத்தியால் வெட்டிக் கொண்டனர். இது சம்பந்தமாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு கொண்ட குற்றவாளியான கலையரசனின் இறுதி ஊர்வலத்தில், வினோத்குமார், மணிகண்டன் ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கிக் கொண்டதில், 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த மோதலின்போது ஒருவரை ஒருவர் கத்தியால் வெட்டிக் கொண்டு தாக்கிக் கொண்டனர்.

இதில் காயமடைந்த சுதாகர், ராஜா, பாலாஜி, மணிகண்டன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மணிகண்டன், நேதாஜி, சுரேஷ், கோபி, வினோத் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பட்டா கத்திகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai velachery clash in two groups


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->