வினாத்தாளில் குளறுபடி.! தேர்வை ஒத்திவைத்த சென்னை பல்கலைக்கழகம்.! - Seithipunal
Seithipunal


சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் பருவத் தேர்வுகள் துவங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இன்று காலை இளங்கலை மாணவர்களுக்கான மூன்றாவது பருவத் தேர்வின் தமிழ் தேர்வு நடைபெற இருந்த நிலையில் மாணவர்கள் அனைவரும் தேர்வு அறைக்கு சென்ற பின்பு அவர்களுக்கு தேர்விற்கான வினாத்தாள் வழங்கப்பட்டது. 

இந்த வினாத்தாள்களை பார்த்த மாணவர்கள் அனைவரும் திகைத்து போய் நின்றனர். ஏனென்றால், நான்காவது பருவ தமிழ் தேர்வுக்கான வினாத்தாளை, இன்று மூன்றாவது பருவத் தேர்வெழுத சென்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், தேர்வு வினாத்தாளில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்து கல்லூரிகள் சார்பில், பல்கலைக் கழகத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்த  சென்னை பல்கலைக் கழகம் இன்று நடைபெற உள்ள தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், இதற்கான மாற்றுத் தேதியும் அறிவிக்கப்பட்டு, மீண்டும் இந்த தேர்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai university today tamil exam postpond for question paper change


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->