சென்னை பீச் to தி.மலைக்கு.. வெறும் ரூ.50-ல் எப்படி.? குஷியில் பயணிகள்.!! - Seithipunal
Seithipunal


அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையிலிருந்து தலைநகர் சென்னை இடையே ரூ.50 கட்டணத்தில் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர் .

வட மாநிலங்களையும் தென் மாவட்டங்களை இணைக்கும் நகரமாக திருவண்ணாமலை இருப்பதால் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை தொடங்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்த நிலையில் தற்போது ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 

அதன்படி திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் விரைவில் காலை 9 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை வந்து அடையும். அதேபோன்று மறு மார்க்கத்தில் மாலை 6:00 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 12 மணிக்கு திருவண்ணாமலையை வந்தடையும். இந்த ரயில் ஆனது சென்னை கடற்கரையில் இரந்து வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai to thiruvannamalai train service in rs50


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->