ஜூன் 1-ல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து!
chennai to chengalpattu Local train
ஜூன் 1-ம் தேதி காட்டாங்குளத்தூரில் நடைபெற உள்ள தண்டவாள பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின் ரயில் சேவையில் பகுதியளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
காலை 11.45 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் மின் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயங்கும். காட்டாங்குளத்தூரிலிருந்து செங்கல்பட்டு வரை ரத்து செய்யப்படும்.
மாற்றங்கள் விவரம்:
* காலை 11.00, 11.45, 12.30, 1.45 மணிக்கு கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும்.
* பிற்பகல் 12.45 மணிக்கு புறப்படும் ரயில் தாம்பரம் வரை இயங்கும்.
* செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 12.00, 1.00, 1.50, 3.05 மணிக்கு புறப்படும் ரயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து இயக்கப்படும்.
* பிற்பகல் 2.25 மணிக்கு புறப்படும் ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.
English Summary
chennai to chengalpattu Local train