அந்த பொறுப்பு பொதுமக்களாகிய உங்களுக்கும் உள்ளது! அழைப்பு விடுத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK STalin Clean Mission
தமிழகத்தில் விரைவில் தொடங்கப்பட உள்ள தூய்மை மிஷன்-ல் அனைத்து துறைகளுடன் இணைந்து செயல்பட்டு சாதனை படைப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "ஒரு நகரின் தூய்மை என்பதில் அரசுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் எவ்வளவு பொறுப்பு உள்ளதோ, அதே அளவு பொறுப்பு பொதுமக்களாகிய நமக்கும் உள்ளது!
யாரோ சுத்தம் செய்கிறார்கள், யாரோ அள்ளுகிறார்கள், யாரோ தரம் பிரிக்கிறார்கள் என்று மானாவாரியாகக் குப்பையை, பிளாஸ்டிக்கை வீசினால், அது மீண்டும் நம்மையே ஏதோ ஒரு வழியில் வந்தடையும்.
வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நாமும் தூய்மையான சுற்றுப்புறங்களைப் பெறவேண்டுமென்றால், குப்பைகளைத் தரம் பிரித்து அதற்குரிய இடத்தில் போடும் குறைந்தபட்ச நாகரிகப் பண்பு இன்றியமையாதது.
விரைவில் தொடங்கப்படவுள்ள #தூய்மை_Mission-இல் அனைத்துத் துறைகளுடன் இணைந்து செயல்பட்டு சாதனை படைப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
CM MK STalin Clean Mission