காலணி என்ற சொல்லை அகற்றிய தமிழக அரசுக்கு ஆதித்தமிழர் கட்சி நன்றி! - Seithipunal
Seithipunal


 காலணி என்ற சொல்லை அகற்றிய தமிழக அரசுக்கு ஆதித்தமிழர் கட்சி நன்றி தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் ஆதித்தமிழர் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம் ஆதித்தமிழர் கட்சியின்  மாவட்ட செயலாளர் வினோத் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஆதித்தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் விஸ்வைகுமார் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் வருகை தந்த மேற்கு மண்டல இளைஞரணி செயலாளர் க. பாண்டி வரவேற்றார். 

இக்கூட்டத்தில் காலணி என்ற சொல்லை அகற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தல், கோவையில் நடைபெறும் முப்பெரும் விழாவிற்கு பெருந்திரளாக கலந்து கொள்ளுதல்,தமிழக அரசுக்கு வர வேண்டிய நிதியை வழங்காமல் இருக்கும் ஒன்றிய அரசை வன்மையாக கண்டித்தல் ,புதிய மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்தல் .

உள் இட ஒதுக்கீடு 3% அருந்ததியர்கள் முழுமையாக பயன்படுத்தாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கும் அரசு ஆணை 61 -ஐ ரத்து செய்ய வேண்டும். என  பல்வேறு தீர்மானங்கள் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

  இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வினோத்,மாவட்ட தலைவர் பழனி மணி,மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் நாகேந்திரன், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் காளீஸ்வரி,மாவட்ட துணை செயலாளர் கோடை சித்ரா,மாவட்ட இளைஞரணி செயலாளர் மலரவன்,மாவட்ட மகளிர் அணி தலைவர் மாரியம்மாள், மாவட்ட தொழிலாளரணி தலைவர் வெண்ணிலா நடராஜன்,  மாவட்ட தொழிலாளரணி செயலாளர் கோடை திருமுருகன், மாவட்ட விவசாய அணி சென்றாயன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஆதிவீரன் என்ற செல்வகுமார் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் மற்றும் தேர்வு செய்யப்பட்டனர் இதில் ஆதித்தமிழர் கட்சி மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் நிறைவில் நகரச் செயலாளர் ராஜீவ்காந்தி நன்றி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thanks to the Tamil Nadu government for removing the word Kaalani


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->