சென்னையில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! - Seithipunal
Seithipunal


ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது..

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த போராட்டத்தில், டாஸ்மாக் ஊழியர்கள் தலைமைச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

போராட்டக்காரர்கள் வலியுறுத்தும் முக்கிய கோரிக்கைகள்:

* அரசு அறிவித்த ரூ.2,000 ஊதிய உயர்வை அனைத்து ஊழியர்களுக்கும் முழுமையாக வழங்க வேண்டும்.
* டாஸ்மாக் நிர்வாகக் குழுவின் 218வது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஊதிய உயர்வுக்கான தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்.
* விசாரணை இல்லாமல் தண்டனை வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும். (உதா: இடமாற்றம், பணி நீக்கம், அபராதம் போன்றவை ஒரே தவறுக்காக வழங்கப்படக்கூடாது).
* மின்னணு இயந்திரங்களின் அடிப்படையில் விற்பனை இலக்குகள் நிர்ணயிக்கப்படுவதையும் நிறுத்த வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு ஏற்கும்வரை போராட்டம் தொடரப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai TASMAC Staff Protest


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->