#சென்னை || கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழப்பு>! - Seithipunal
Seithipunal


சென்னையில் மீண்டும் ஒரு விசாரணைக் கைதி மரணம் அடைந்திருப்பது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட அன்பு என்கின்ற ராஜசேகர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு திருவள்ளூரில் வைத்து செங்குன்றத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரை கைது செய்த போலீசார், இன்று மாலை 5 மணிக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட போது உயிரிழந்ததாக தகவல்.

முதல் முதல்கட்ட தகவலின்படி, சொத்து தொடர்பான ஒரு புகாரின் பேரில் ராஜசேகரை அழைத்து வரும்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தபோது, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தெரியவந்துள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி அன்று சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விக்னேஷ் என்ற விசாரணைக் கைதி அழைத்து செல்லப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

விசாரணைக் கைதிகள் விக்னேஷ் மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், அவர் போலீசாரால் தாக்கப்பட்டு தான் அவர் உயிரிழந்தார் என்பது தெரியவந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கொடுங்கையூர் காவல் நிலைத்தில் விசாரணைக் கைதி ஒருவர் மரணம் அடைந்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai kodunkaiyur police station lockup dead


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->