கூட்டத்தில் பங்கேற்காத பஞ்சாயத்து உறுப்பினர்கள் வழக்கு - மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


கூட்டத்தில் பங்கேற்காத பஞ்சாயத்து உறுப்பினர்கள் வழக்கு - மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொடுகாடு கிராம பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் வெங்கடேசன். இவர் கடந்த மே மாதம் மாவட்ட ஆட்சியருக்கு மனு ஒன்று அனுப்பி வைத்துள்ளார். 

அந்த மனுவில், "அரசு விதிப்படி மாதம் ஒருமுறை பஞ்சாயத்து கூட்டம் கூட்டப்படும் போது, முனுசாமி, பிரியங்கா, கோமதி, ராணி, யுவராஜ், மாரியம்மாள் உள்ளிட்ட ஆறு உறுப்பினர்கள் கலந்து கொள்வதில்லை எனக் கூறி, அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பஞ்சாயத்து தலைவர் வெங்கடேசன் இந்த மனுவை பரிசீலனை செய்து, மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடர்ந்துள்ளார். அதில், "முறையாக நோட்டீஸ் அனுப்பியும் இவர்கள் ஆறு பேரும் ஒன்பது முறை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

மூன்று கூட்டங்களில் பங்கேற்கவில்லை என்றால் உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் வழிவகை செய்துள்ளது என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இவர்களை தகுதி நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என்றுத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், "பஞ்சாயத்து செயல்பாடுகள் சுமுகமாக இருக்க வேண்டும் என்று மனுதாரர் நினைப்பதால் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும்,  மனுதாரர் அளித்த மனுவை சட்டத்துக்கு உட்பட்டு, சம்பந்தப்பட்ட ஆறு பேரும் விளக்கம் அளிக்க வாய்ப்பளித்து, மனுவை பரிசீலித்து, நான்கு வாரங்களில் இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai HC order to counsilors not attend meeting case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->