"நாளை ஆட்டோக்கள் ஓடாது!": கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மாபெரும் போராட்டம்!
Chennai Braces for Auto Strike Drivers Demand Fare Revision Regulation
தமிழகம் முழுவதும் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கூட்டமைப்பினர் நாளை (பிப்ரவரி 10, செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதன் காரணமாகச் சென்னையில் நாளை ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி சேவை கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
முக்கியக் கோரிக்கைகள்:
பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் உள்ள தங்களது வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்வைத்து ஓட்டுநர்கள் இந்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்:
மீட்டர் கட்டண உயர்வு: பல ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ள ஆட்டோ மீட்டர் கட்டணத்தைத் தற்போதைய எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப உடனடியாக மாற்றியமைக்க வேண்டும்.
அக்ரிகேட்டர் சட்டம்: ஓலா, ஊபர், ரேபிடோ மற்றும் நம்ம யாத்ரி போன்ற தனியார் நிறுவனங்களை முறைப்படுத்தத் தனிச் சட்டம் (Aggregator Act) இயற்றப்பட வேண்டும்.
முத்தரப்பு பேச்சுவார்த்தை: அரசு, தொழிற்சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும்.
சட்டவிரோதப் போக்குவரத்து: சொந்த பயன்பாட்டு (White Board) வாகனங்களில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்வதைத் தடுத்து, முறையான வரி செலுத்தும் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் ஏற்கனவே மண்டல அலுவலகங்கள் முன் போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், நாளை மாநிலத் தலைநகர் சென்னையில் மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரகத்தில் ஓட்டுநர்கள் 'காத்திருப்புப் போராட்டத்தில்' ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த வேலைநிறுத்தத்தால் அலுவலகம் செல்வோர் மற்றும் பள்ளி மாணவர்கள் மாற்றுப் போக்குவரத்து வசதிகளை முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
English Summary
Chennai Braces for Auto Strike Drivers Demand Fare Revision Regulation