கோவிலுக்கு நடந்து சென்ற பெண்.. கைவரிசை காட்டிய மர்மநபர்.! - Seithipunal
Seithipunal


கோவிலுக்கு நடந்த சென்ற பெண்ணிடம் பட்டப்பகலில் செயின் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் குழந்தை அம்மாள் நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எல்ஐசி-யில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சிவசங்கரி என்ற மனைவி உள்ளார்.

இந்த நிலையில் மனைவி சிவசங்கரி வீட்டில் இருந்து கோவிலுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் சிவசங்கரியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க செயினை பறித்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக சிவசங்கரி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் செயினை பறித்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chain snatching in Thanjavur


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->