காவிரி நீர் விவகாரம்: கர்நாடக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் - தே.மு.தி.க திட்டவட்டம்! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூரில் தே.மு.தி.க சார்பில் கர்நாடக அரசை கண்டித்து வருகின்ற 27ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். 

இது குறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தமிழக விவசாயிகளை கர்நாடக அரசு காவிரி நீரை திறந்து விடாமல் தண்டித்து வருகிறது. 

கர்நாடகா அரசை கண்டித்தும், மாநில அரசுகளை கண்டித்தும் தஞ்சாவூரில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் தே.மு.தி.க சார்பில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெறும். 

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலை அருகில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் காலை 9 மணி முதல் 5 மணி வரை போராட்டம் நடைபெறும். 

இந்த போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cauvery water issue Karnataka government against DMDK protest 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->