திருமண மண்படம் புக் செய்ய சென்ற மணபெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!
Car Accident Near Thiruppathi
கார் கவிழ்ந்து விழுந்து பெண் எஞ்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் பிரியங்காவிற்கு பெற்றோர்கள் திருமணம் செய்ய நிச்சயித்துள்ளனர். அவரது திருமணத்தை திருமலையில் செய்து வைக்க முடிவு செய்தனர்.இந்த நிலையில் திருமணத்திற்கு, திருமண மண்டபத்தை முன்பதிவு செய்வதற்காக பிரியங்கா, அவரது பெற்றோர்கள் மற்றும் சித்தப்பா மகன் ஆகியோர் நேற்று முன்தினம் திருப்பதி சென்றனர்.
பிரியங்கா காரை ஒட்டி சென்ற போது, வடமாலப்பேட்டை மண்டலம் அஞ்சேரம்மன் கோவில் அருகில் சென்றபோது அங்கிருந்த வேகத்தடை அருகே கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில், படுகாயமடைந்த பிரியங்கா அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Car Accident Near Thiruppathi