சிவகிரி அருகே தனியார் பேருந்து-இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


சிவகிரி அருகே தனியார் பேருந்து-இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளார்.

முத்தூரில் இருந்து ஈரோடு செல்வதற்காக தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.

அப்பொழுது சிவகிரி அருகே எதிர் திசையிலிருந்து வந்த இருசக்கர வாகனத்தில், பேருந்து ஒரு வளைவில் திரும்பும்போது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் தூக்கி வீசப்பட்ட நிலையில் பலத்த காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்த 2 பேரையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சந்தோஷ் என்ற இளைஞர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து மற்றொரு இளைஞர் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து சிவகிரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bus twowheeler accident in sivagiri near


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->