பணத் தகராறில் நண்பனை உயிருடன் விடாத கொடூர தாக்குதல்...! - கல்லால் முகம் சிதைத்து கொலை...!
brutal attack that left friend dead over money dispute Murder by disfiguring his face stone
நெல்லை பெருமாள்புரம் தாமஸ் 4வது தெருவைச் சேர்ந்த மாரியப்பனின் மகன் ஜோசப்ராஜா (30), கட்டிடத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவரும் தாழையூத்து அருகே பண்டாரகுளத்தைச் சேர்ந்த செல்லத்துரையின் மகன் மாடசாமி (31) என்பவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து, ஒன்றாகவே வேலைக்கு சென்று வந்தனர்.

வழக்கம்போல், நேற்று முன்தினம் வேலை முடிந்தபின் இருவரும் நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, சில நாட்களுக்கு முன்பு ஜோசப்ராஜா எடுத்திருந்த ரூ.7,000 கடனை திருப்பிக் கேட்டு மாடசாமி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் தீவிரமடைந்து, சூழ்நிலை கட்டுக்கட்டுப்பாட்டை இழந்தது.மதுபோதையில் இருந்த மாடசாமி, திடீர் ஆத்திரத்தில் அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து ஜோசப்ராஜாவை தாக்கியுள்ளார்.
அதனால் அவர் கீழே விழுந்ததும், மேலும் கொடூரமாக அவரது முகத்தில் மீண்டும் மீண்டும் கல்லால் தாக்கி, பின்னர் கழுத்தை துணியால் இறுக்கியும், காலால் மிதித்தும் உயிரை மாய்த்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துக்குப் பிறகு, நள்ளிரவு 1 மணியளவில் மாடசாமி நேரடியாக புதிய பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்துக்கு சென்று, “நான் ஒருவரை கொலை செய்துவிட்டேன்” என்று ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த காவலர்கள் உடனடியாக மேலப்பாளையம் காவலர்களுக்கு தகவல் வழங்கினர்.
இந்தச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவலர்கள், முகம் சிதைந்த நிலையில் கிடந்த ஜோசப்ராஜாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து மாடசாமியை கைது செய்த காவலர்கள், மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட சிறிய பணத் தகராறு இவ்வாறு கொடூரமான கொலையாக மாறிய சம்பவம், நெல்லை பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
brutal attack that left friend dead over money dispute Murder by disfiguring his face stone