சொத்து பிரச்சனை: முதியவரை அறிவாளால் வெட்டிய தம்பி மகன் கைது.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் சொத்து பிரச்சனையில் முதியவரை அறிவாளால் வெட்டிய தம்பி மகனை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே செங்கொல்லை பகுதியை சேர்ந்தவர் பால்சாமி(65). இவரது தம்பி கந்தையாவின் மகன் சங்கர் (47). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் சொத்துப் பிரச்சனை தொடர்பாக அவ்வப்போது சங்கர் பால்சாமியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இதையடுத்து சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த சங்கர் பால் சாமியிடம் தகராறில் ஈடுபட்டு தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் பால்சாமியை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த பால் சாமியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து வடகாடு போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவரை அறிவாளால் வெட்டிய சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Brothers son arrested for cutting old man with sickle in Pudukkottai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->