காதலி தற்கொலை... "வீடியோ காலில்" ரசித்த காதலன்..! திருவாரூரில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் காதலி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வதை வீடியோ காலில் பார்த்து ரசித்த காதலனை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் அர்ச்சனா (24). இவர் திருவாரூர் நன்னிலம் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மேலும் இதற்காக அவர் அதே பகுதியில் வீடு எடுத்து தங்கி இருந்தார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று வேலைக்கு சென்ற அர்ச்சனா, மதியம் வயிறு வலிப்பதாக கூறிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து அவரது தோழி வீட்டிற்கு சென்று பார்த்த போது அர்ச்சனா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து நன்னிலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அர்ச்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அர்ச்சனா கடைசியாக செல்போனில் நாகை மாவட்டம் பஞ்சநதிகுளம் பகுதியை சேர்ந்த சத்யராஜ் (26) என்பவருடன் வீடியோ காலில் பேசியுள்ளார்.

இந்நிலையில் போலீசார் சத்தியராஜிடம் விசாரித்ததில், அர்ச்சனாவும், சத்யராஜும் காதலித்து வந்த நிலையில், சத்யராஜுக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அர்ச்சனாவுக்கும், சத்யராஜுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மன வேதனை அடைந்த அர்ச்சனா சத்யராஜுடன் வீடியோ காலில் பேசியபடியே தற்கொலை செய்து கொண்டதும், அந்த காட்சியைப் பார்த்து சத்தியராஜ் ரசித்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சத்தியராஜை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boyfriend arrested for watching girlfriend suicide by hang herself on video call in tiruvarur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->