குளித்து கொண்டிருக்கும் போது நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவன்..சுற்றுலா தளத்தில் நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


சுற்றுலாவிற்கு சென்ற சிறுவன் கடலில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் , பெங்களூருவை சேர்ந்தவர் தயாளன் . இவருகு திருமணமாகி ஞானமணி என்பவரும் கெல்வின் என்ற மகனும் உள்ளனர். ஞானமணி தனது மகன் மற்றும் உறவினர்களுடன்  வேளாங்கண்ணிக்கு சுற்றுலாவிற்கு சென்றுள்ளார்.

வேளாங்கண்ணி வெள்ளையாற்றின் முகத்துவாரத்தில் குளித்து கொண்டிருக்கும் போது கெல்வின் நீரில் இழுத்து செல்லப்பட்டான். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அருகில் இருந்த காவல்துறை மற்றும் பொதுமக்களின் உதவியுடன் நீரில் இறங்கி தேடினர். ஆனால், சிறுவன் கிடைக்கவில்லை.

இந்நிலையில், சிறுவனின் உடல் பிரதாபராமபுரம்  கடற்கரையில் கரை ஒதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் வரவே விரைந்து சென்ற அவர்கள் சிறுவனின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boy drowns in sea in Velankanni


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->